தொடக்கக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் 796 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 796 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். 562 இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment