தொடர் அரசு விடுமுறை : மின் ஊழியர்கள் 'அலர்ட்
சென்னை: ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக, அரசு விடுமுறை வருவதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்கும்படி, ஊழியர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி தவிர்த்து, மற்ற மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு, இன்று முதல், 12ம் தேதி வரை விடுமுறை. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கும், ஐந்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுமுறை நாட்களில், மின் தேவை எப்போது அதிகரிக்கும் என்பதை கணிக்க முடியாது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், மின் தேவை வெகுவாகக் குறையலாம் அல்லது திடீரென அதிகரிக்கலாம். இதனால், 'லோ, ஹை வோல்டேஜ்' பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரிவு அலுவலகத்தினரும், மின் தடை நீக்கும் ஊழியர்களும், மின் வினியோகத்தில், கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை: ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக, அரசு விடுமுறை வருவதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்கும்படி, ஊழியர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி தவிர்த்து, மற்ற மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு, இன்று முதல், 12ம் தேதி வரை விடுமுறை. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கும், ஐந்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுமுறை நாட்களில், மின் தேவை எப்போது அதிகரிக்கும் என்பதை கணிக்க முடியாது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், மின் தேவை வெகுவாகக் குறையலாம் அல்லது திடீரென அதிகரிக்கலாம். இதனால், 'லோ, ஹை வோல்டேஜ்' பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரிவு அலுவலகத்தினரும், மின் தடை நீக்கும் ஊழியர்களும், மின் வினியோகத்தில், கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment