Thursday, 12 May 2016

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது:
நாட்டில் போலியாகசெயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கேட்டுக்கொண்டோம்.அதன்படி யுஜிசி அளித்த பட்டியலில் நாடு முழுவதும்22பல்கலைக்கழங்கள் போலியாக செயல்பட்டு வருவதை அறிந்துள்ளோம்.அந்த பல்கலைக்கழகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதில்9போலி பல்கலைகக்ழகங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.
மேலும் டெல்லியில்5போலி பல்கலைக்கழங்களும்,மேற்கு வங்கத்தில்2பல்கலை.யு,ம்,பிகார்,கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரம்,தமிழகம்,ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலை.யும் போலியாக செயல்பட்டு வருகின்றன.இந்த விஷயத்தில் மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கேற்ப உரிய உத்தரவுகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம்.

No comments:

Post a Comment