Monday, 22 February 2016

டெல்லி: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக வெளிவந்த ஃப்ரீடம் 251 (Freedom251) என்ற மிக மலிவான மொபைல் போன் அறிமுகத்தின் முதலே மக்கள் மத்தியில் பல விதமான கருத்துக்கள் கிளம்பின.
இதன் அறிமுகத்தின் மூலம் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைத்தாலும், இந்நிறுவன தலைவர் பல விதமான இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இவர் நிறுவனத்தின் வியாபார வியூகத்தை முழுமையாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் இந்நிறுவன தலைவர் மோஹித் கோயல்.
மொபைல் போன் யாரும் அளிக்க முடியாத 251 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், இதன் விற்பனையின் மூலம் 31 ரூபாய் லாபமும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார் மோஹித் கோயல்.
(ஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..!)

No comments:

Post a Comment