தொடக்கக்கல்வியில் நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கைளை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலரும் கல்வியாண்டின் இறுதியில் நீண்ட விடுப்பு எடுத்து வருகின்றனர்.
உதாரணமாக, தங்களது குழந்தைகள், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வெழுதும் பட்சத்தில், பெற்றோராக உதவி செய்ய வேண்டும் எனக்கருதி, இரண்டு மாதம் வரை, மருத்துவ விடுப்பு எடுத்துவிடுகின்றனர். இதனால், ஈராசிரியர் பள்ளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் தகவல் எதுவும் தெரிவிக்காமலும், போராட்டத்தை காரணம் காட்டியும், நீண்ட விடுப்பு எடுத்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, முறைகேடாக நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும், தங்களது அதிகாரத்துக்குட்பட்ட பள்ளிகளில், நீண்ட விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள், அதற்கான உண்மை தன்மை உள்ளிட்டவைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
உதாரணமாக, தங்களது குழந்தைகள், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வெழுதும் பட்சத்தில், பெற்றோராக உதவி செய்ய வேண்டும் எனக்கருதி, இரண்டு மாதம் வரை, மருத்துவ விடுப்பு எடுத்துவிடுகின்றனர். இதனால், ஈராசிரியர் பள்ளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் தகவல் எதுவும் தெரிவிக்காமலும், போராட்டத்தை காரணம் காட்டியும், நீண்ட விடுப்பு எடுத்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, முறைகேடாக நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும், தங்களது அதிகாரத்துக்குட்பட்ட பள்ளிகளில், நீண்ட விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள், அதற்கான உண்மை தன்மை உள்ளிட்டவைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment