தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. எனவே புதியசட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று சமீபத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்த அடிப்படையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதிஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடைமுறைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மார்ச் 2–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று தெரிகிறது.
அப்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்த அடிப்படையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதிஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடைமுறைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மார்ச் 2–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment