Saturday, 27 February 2016

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில்பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழையதிட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதியதிட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்
வருகிற 29ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல்செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லிபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள்,
அறிவிப்புகள் இருக்கும்.


குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிகஅளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள்அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்குதற்போது ரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்என்று தெரிகிறது.
மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில்எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்குவரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன்பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதிஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமைஅதிகரிக்கும்.
தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும்வாய்ப்பு உள்ளது.

நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதாரவல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது

No comments:

Post a Comment